என்கவுண்டர் செய்வதாக மிரட்டி மனைவியை பலாத்காரம் செய்த எஸ்.பி! பெங்களூர் ஐடி ஊழியர் பரபரப்பு புகார்
Recommended Video
பெங்களூர்: தன்னையும் தனது மனைவியையும் மிரட்டி கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பலாத்காரம் செய்ததாக ஐடி ஊழியர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூர், கோரமங்களாவை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவரது மனைவி ரூபா. இவரை ஐபிஎஸ் அதிகாரி பீமசங்கர் எஸ்.குல்ட் என்பவர் மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார் சுரேஷ்.
மேலும், இதுதொடர்பாக, அவ்விருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகளை மீடியாக்களுக்கு வெளியிட்டார்.
போட்டோ ஸ்டூடியோ
இதுபற்றி சுரேஷ் கூறுகையில், ரூபா போட்டோ ஸ்டோடியோ நடத்தி வந்தார். தாவணகெரே எஸ்பியாக பீமாசங்கர் பதவி வகித்தபோது, தனது இரட்டை குழந்தைகளின் பிறந்த நாள் நிகழ்ச்சியை போட்டோ சூட் எடுக்க ரூபாவை பீமாசங்கர் அணுகினார். அப்போதுதான் ரூபா அறிமுகம் பீமாசங்கருக்கு கிடைத்தது.
என்கவுண்டர் மிரட்டல்
ரூபாவை அடைய வேண்டும் என்பதற்காக, என்னையும், ரூபாவையும் என்கவுண்டர் செய்துவிடுவதாக மிரட்டினார் பீமாசங்கர். இதன்பிறகு ரூபாவுடன் உல்லாசம் அனுபவித்தார். இதை பலாத்கார வழக்காக பதிவு செய்ய வேண்டும் என கோரமங்களா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சுரேஷ்.
வழக்கு பதியவில்லை
ஆனால், இதை பலாத்கார வழக்காக பதிவு செய்யாத போலீசார், செக்ஷன் 497ன்கீழ், புகாரை மட்டும் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவை வைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது என்பது போலீசாரின் பதில். மேலும் சட்ட வல்லுநர்கள் கருத்தையும் காவல்துறை கேட்டுள்ளது.
மறுக்கும் மனைவி
ஆனால், வழக்கில் முக்கிய திருப்பமாக, சுரேஷின் மனைவி ரூபாவே, இந்த புகாரை மறுத்துள்ளார். பீமாசங்கர் தன்னை மிரட்டவில்லை என்று கூறியுள்ள அவர், சுரேஷ்தான் தன்னை வீட்டில் அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும், எனவே, தனது கணவரை விட்டு கடந்த சில மாதங்களாக, பிரிந்துதான் வாழ்ந்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.