For Daily Alerts
Just In
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்த பெங்களூர் வாலிபர் குலு நகரில் கைது
பெங்களூர்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெங்களூர் வாலிபரை ஹிமாச்சல பிரதேச மாநிலம் குலு நகரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான வாலிபர் 23 வயதாகும், அபீத் கான் என தெரியவந்துள்ளது. டிஜிபி சஞ்சய் குமார் இத்தகவலை உறுதி செய்துள்ளார். தற்போது அந்த வாலிபரிடம் இந்திய உளவு அமைப்பின் பல்வேறு அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகள் இன்று அந்த வாலிபரிடம் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது. ஏற்கனவே நாட்டின் சில இடங்களில் இதுபோன்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த கைது நடவடிக்கை அமைத்துள்ளது.
டெல்லியிலிருந்து இந்த தீவிரவாத ஆதரவாளர்களுக்கு உத்தரவுகள் பறப்பது வழக்கம் என கூறப்படுகிறது.
Comments
English summary
A 23-year-old resident of Bengaluru with suspected links to the ISIS has been arrested at Kullu in Himachal Pradesh.
Story first published: Sunday, December 18, 2016, 10:51 [IST]