For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம்.. பெங்களூர் தமிழ்ச்சங்கம் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தமிழக போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து பெங்களூர் தமிழ்ச்சங்கம் சார்பில் பெங்களூரில் போராட்டம் நடந்தது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தமிழக போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து பெங்களூர் தமிழ்ச்சங்கம் சார்பில் பெங்களூரில் போராட்டம் நடந்தது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் போராட்டத்தின் போது அங்கு இருந்த மக்கள் மீது தமிழக போலீஸ் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

Bengaluru Tamil Sangam did protest against TN gov on Tuticorin shooting

இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழக அரசின் இந்த கொடூர செயல் காரணமாக தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் இங்கிலாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற இடங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை பெங்களூரில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து பெங்களூர் தமிழ்ச்சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. பெங்களூரில் இருக்கும் முக்கியமான அரசு கட்டிடமான மயோ ஹாலில் போராட்டம் நடைபெற்றது.

பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக அரசுக்கும், போலீசுக்கும் எதிராக இதில் கோஷம் எழுப்பினார்கள். மேலும் தமிழக அரசை கண்டிக்கும் விதத்தில் போஸ்டர்கள் தாங்கி போராட்டம் நடத்தினர்.

English summary
Bengaluru Tamil Sangam did protest against TN gov on Tuticorin shooting in Bengaluru Myao Hall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X