For Daily Alerts
Just In
கட்சிக்கு அப்பாற்பட்ட நட்பு.. கருணாநிதிக்கு நிதிஷ்குமார் மரியாதை.. பீகாரில் இரண்டு நாள் துக்கம்!
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு, முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு இரண்டு நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
Recommended Video
கருணாநிதி மறைவையொட்டி நாடு முழுவதும் இன்று துக்கம் அனுசரிப்பு
பாட்னா: திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் மறைவையொட்டி, இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக் குறைவால் இன்று மாலை உயிரிழந்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு, அவர் பல்வேறு கட்சித் தலைவர்களுடனும் நட்புடன் இருந்து வந்துள்ளார்.
அதை உணர்த்தும் வகையில், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசு பீகாரில் அமைந்துள்ளது. கருணாநிதி மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ள நிதிஷ்குமார் அரசு, இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
Comments
English summary
Bihar announced two days mourning for karunanidhi
Story first published: Wednesday, August 8, 2018, 0:19 [IST]