பீகாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு வேட்டு வைத்த ஆர்.எஸ்.எஸ்.
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணி வெற்றி பெற 5 முக்கிய காரணங்கள் உள்ளன.
பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஐக்கிய ஜனதாதள கூட்டணி தான் முன்னணியில் உள்ளது.
ஐக்கிய ஜனதாதள கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் அந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கான 5 காரணங்கள் தெரிய வந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.
இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்தது பீகாரில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
பாஜக
பாஜக கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளர் இவர் தான் அறிவிக்கப்படவில்லை. அந்த கூட்டணியில் இருந்த முன்னாள் பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சியும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.
பருப்பு
பருப்பு விலை விண்ணைத் தொட்டதும் தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரில் தோல்வி அடைய காரணமாக கூறப்படுகிறது.
தாத்ரி
தாத்ரி சம்பவத்தை பார்த்த முஸ்லீம்கள் பாஜக கூட்டணியை புறக்கணித்துவிட்டு ஐக்கிய ஜனதாதள கூட்டணியை ஆதரித்துள்ளனர்.
லாலு
நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகிய இரு சக்திகள் ஒன்று சேர்ந்ததும் மகாகத்பந்தன் கூட்டணி வெற்றி பெற காரணம் ஆகும்.