பீகாரில் 4 அதிருப்தி ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்- சபாநாயகர் அதிரடி!
பாட்னா: பீகாரில் 4 அதிருப்தி ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் ஐக்கிய ஜனதா தள அரசுக்கு ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்டவை ஆதரவு அளித்து வருகின்றனர். இருப்பினும் ஆளும் ஐக்கிய ஜந்தஹா தளத்தில் ஞானேந்திர சிங், நீரஜ்சிங், ரவீந்த்ர ராய், ராகுல் சர்மா ஆகிய ஆகிய 4 பேரும் கட்சியில் கலகக் குரல் எழுப்பி வந்தனர். இதனால் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த 4 எம்.எல்.ஏக்களையும் பீகார் சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும் 4 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள அரசுக்கு எந்த ஒரு நெருக்கடியும் ஏற்படாது என்றே கூறப்படுகிறது.