பெட்ரோல் போடுவது போல் வந்த நபர்.. துப்பாக்கி முனையில் ஊழியரிடம் கொள்ளை.. அதிர்ச்சி வீடியோ
அலிகார்: உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் பெட்ரோல் போட வருவது போல் வந்து அங்கிருந்த ஊழியரிடம் ரூ 2500 ஐ மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலிகாரில் ஜவான் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு நள்ளிரவில் பெட்ரோல் போட 3 பேர் வந்துள்ளனர். அப்போது பெட்ரோலை போட்டு அந்த ஊழியர் அங்கு அமர்ந்திருந்தார்.
அப்போது மூன்று பேரில் ஒருவர் திடீரென பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த ஊழியரை மிரட்டினார். அப்போது அவர் சேகரித்து வைத்த பணப்பையை பறித்து கொண்டு இருவரும் கண் இமைக்கும் நேரத்தில் சென்றுவிட்டனர்.
#WATCH Aligarh: A bike-borne man loots Rs 2500, at gun point, from a petrol pump staff in Jawan area. Police say, "3 bike-borne men went there, one had a gun. They looted cash from the petrol pump staff. CCTV footage is being checked, case registered, case will be solved." (20.7) pic.twitter.com/gxhgb6ZCw4
— ANI UP (@ANINewsUP) July 20, 2019
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்த போலீஸார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். சுமார் ரூபாய் 2500 கொள்ளையடிக்கப்பட்டது.
நீங்கள் அபாய கட்டத்தை நெருங்கி விட்டீர்கள்.. ஜாக்கிரதை.. பாஜகவிற்கு மமதா கடும் எச்சரிக்கை!