ஜெய்ப்பூரில் இரவில் பிகினியில் ஊரை சுற்றிய இளம்பெண்: வைரலான வீடியோ
ஜெய்பூர்: ஜெய்பூரில் இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் பிகினி அணிந்து சாலைகளில் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 20களில் இருக்கும் பெண் ஒருவர் பிகினி அணிந்து இரவு நேரத்தில் சாலைகளில் ஒய்யாரமாக நடந்து சென்றுள்ளார். அவர் நடந்து வரும் தோரணையை பார்த்தாலே அவர் துணிச்சலுடன் வேண்டும் என்றே பிகினியில் வந்தது போன்று உள்ளது.
பெண் ஒருவர் பிகினியில் வருவதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பல இளசுகள் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். இருப்பினும் அந்த பெண் அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை.
இப்படி ஒரு பெண்ணை ஊரே ஒரு மாதிரியாக பார்க்கிறதே என்று ஆதங்கப்பட்ட முதியவர் ஒருவர் அவரிடம் ஏம்மா உன் உடையால் அனைவரும் உன்னைத் தான் பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அதற்கு அந்த பெண்ணோ போலீசாரிடம் தெரிவித்துள்ளேன். அவர்கள் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றார். அந்த பெண் விளம்பரத்திற்காக இப்படி செய்தாரா என தெரியவில்லை.
அந்த பெண் பிகினில் ஊரை சுற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.