நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு: கோப்புகளை கேட்டு பிரதமருக்கு சிபிஐ கடிதம்
ஒடிசா மாநிலத்தில் உள்ள தலாபிரா நிலக்கரிச் சுரங்கத்தை ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
அண்மையில் பதிவு செய்யப்பட்ட ஹிண்டால்கோ மீதான வழக்கு உள்ளிட்ட 14 வழக்குகள் தொடர்பான விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நேற்று தாக்கல் செய்தது. இந்நிலையில், ஹிண்டால்கோவுக்கு நிலக்கரிச் சுரங்கத்தை ஒதுக்கீடு செய்தது தொடர்பான கோப்புகளை அளிக்குமாறு பிரதமர் அலுவலகத்துக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது.
ஹிண்டால்கோ உள்ளிட்ட வழக்குகளின் விசாரணை தொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், அது தொடர்பான ஆவணங்களை கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். இப்போதைக்கு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.