இமாசல பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் - இந்தியா டுடே சர்வே
இமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடே -அக்சிஸ் மை இந்தியா மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
சிம்லா: இமாசல பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடே -அக்சிஸ் மை இந்தியா மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இமாசல பிரதேச மாநிலத்தில் வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நவம்பர் 9ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக அடுத்த மாதம் நவம்பர் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 18ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
மொத்தமுள்ள 68 இடங்களில் 43 முதல் 47 இடங்களை பாஜக கைப்பற்றும் என்று இந்தியா டுடே -அக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தற்போது பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 21 முதல் 25 இடங்களே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. பிற கட்சிக்கு 2 இடங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.