ராஜஸ்தானிலும் பாஜக 'போங்கு' ஆட்டம்.. 25 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடியாம்.. கவிழும் காங். அரசு?
ஜெய்ப்பூர்: லோக்சபா தேர்தல் முடிவுகளால் பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகள் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டன. மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
அண்மையில் நடைபெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் லோக்சபா தேர்தலில் இம்மாநிலங்களில் காங்கிரஸ் மரண அடி வாங்கியது.
பாருங்கள் கேளுங்கள்.. பற்பல குரல்கள்... ஒன்று சேர்ந்து ஒரே மேடையில்...!
25 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி
இதனால் காங்கிரஸ் மேலிடம் இம்மாநில தலைமைகள் மிகக் கடும் அதிருப்தியில் இருக்கின்றன. இந்த நிலையில் ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது அக்கட்சியின் 25 எம்.எல்,ஏ.க்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்கிறது பாஜக.
பாஜக கருத்து
இது தொடர்பாக பாஜக ராஜஸ்தான் மாநில துணைத் தலைவர் ஞான்தேவ் அஹுஜா கூறுகையில், ராஜஸ்தான் அரசை ஆதரிக்கும் பகுஜன் சமாஜ எம். எல். ஏக்களும் அதிருப்தியில் உள்ளனர். 20 முதல் 25 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.
காங். அரசு கவிழும்
காங்கிரஸ் அரசை நாங்கள் கலைக்க வேண்டியது இல்லை. அந்த அரசே கலைந்துவிடும் நிலையில்தான் இருக்கிறது. ஓரிரு நாட்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமாக்கள் நடைபெறுமமென்றார்.
மாநில அரசுகள் நிலவரம்
ஏற்கனவே மேற்கு வங்கத்தில் திரிணாமுல் அரசை கலகலக்க வைத்துக் கொண்டிருக்கிறது பாஜக. மத்திய பிரதேச ஆட்சிக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற சூழல். இந்த வரிசையில் தற்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.