சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி உறுதி... தொண்டர்கள் கொண்டாட்டம்
Recommended Video
ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் 60 தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருப்பதால், அக்கட்சியினர் மேள, தாளங்கள் முழங்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டிஸ்கரில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகித்தது. பின்னர், திடீர் திருப்பமாக, காங்கிரஸ் முன்னிலையில் சென்றது. ராஜ்நந்த்கான் தொகுதியில் முதல்வர் ரமன் சிங்கை எதிர்த்து போட்டியிட்ட கருணா சிங் முன்னிலை பெற்றார். பின்னர் மறுபடியும், ரமன் சிங் முன்னிலையில் உள்ளார்.
சட்டீஸ்கரில் ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவை. வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், தொண்டர்கள் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 64, பாஜக 21, பகுஜன் சமாஜ் 4 தொகுதிகள் என முன்னிலையில் உள்ளன. ஆட்சியமைக்கத் தேவையான பலத்தை காங்கிரஸ் பெற்று முன்னணி வகித்து வருகிறது.