ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: பாஜகவுக்கு அதிக இடங்கள்; தொங்கு சட்டசபை: கருத்து கணிப்பு
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றினாலும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பதால் தொங்கு சட்டசபைதான் உருவாகும் என சி வோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி தொடங்கி டிசம்பர் 20 வரை 5 கட்டமாக நடைபெறுகிறது. அனைத்து கட்ட வாக்குகளும் டிசம்பர் 23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக சி வோட்டர் கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. இதன் முடிவுகள் விவரம்:
பாஜகவுக்கு 28 முதல் 38 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான 41 தொகுதிகளை பாஜக கைப்பற்றுவது கடினம்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 18 முதல் 28 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 4 முதல் 10 இடங்கள் கிடைக்கும்.
ஏஜேஎஸ்யூ கட்சிக்கு 4 முதல் 10 தொகுதிகள் கிடைக்கும் என்பதால் இம்முறையும் இக்கட்சியே தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும். இதர கட்சிகள் 3 முதல் 9 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளது. இவ்வாறு கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.