ம.பி.யில் 'தாய்வீடு' காங்கிரஸுக்கு திரும்பும் 2 எம்.எல்.ஏக்கள்... பாஜக கடும் அதிர்ச்சி
Recommended Video
போபால்: மத்திய பிரதேசத்தில் தாய்வீடான காங்கிரஸுக்கு 2 எம்.எல்.ஏக்கள் திரும்புவது பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து குமாரசாமி அரசை கவிழ்த்தது பாஜக. இதையடுத்து மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸை கவிழ்க்கும் நடவடிக்கைகளை பாஜக தொடங்கியது.
அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா, பாஜகவின் நம்பர் 1, நம்பர் 2 உத்தரவிட்டால் அடுத்த 24 மணிநேரத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்க்கப்படும் என கூறியிருந்தார். ஆனால் பார்கவ் இப்படி கூறிய சில மணிநேரங்களிலேயே பாஜகவுக்கு மூக்குடைப்புதான் கிடைத்தது.
மோடியின் தீவிர ஆதரவாளர்.. குஜராத் பெண்.. பிரிட்டனில் உயரிய பதவிக்கு தேர்வு.. புதிய பிரதமர் அதிரடி!
2 பாஜக எம்.எல்.ஏக்கள் பல்டி
சட்டசபையில் கமல்நாத் அரசு கொண்டு வந்த குற்றவியல் சட்ட திருத்த மசோதாவுக்கு பாஜகவின் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 2 எம்.எல்.ஏக்களும் திடீரென மாயமாகி திரும்பினர்.
மாஜி காங்கிரஸார்
மைகார் தொகுதி எம்.எல்.ஏ. திரிபாதி, பியோகாரி தொகுதி எம்.எல்.ஏ. கோல் ஆகிய இருவரும்தான் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள். இவர்கள் 2 பேருமே காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்கள்.
தாய்வீடு திரும்புகிறோம்
இது தொடர்பாக திரிபாதி கூறுகையில், பிற கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு பாஜக மரியாதை தருவதில்லை. போலியான வாக்குறுதிகளைத்தான் பாஜக தருகிறது. தற்போது நாங்கள் தாய்வீடு திரும்புகிறோம் என்றார்.
பாஜக கடும் அதிர்ச்சி
2 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் பக்கம் தாவியதால் பாஜக கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. இந்த 2 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பாஜக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.