கூட்டணி இல்லாமலேயே ஆட்சியமைப்போம்.. அடித்து கூறிய அமைச்சர் சதானந்தா கவுடா!
கர்நாடகாவில் எந்த கட்சியின் ஆதரவும் இன்றி பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடகாவில் எந்த கட்சியின் ஆதரவும் இன்றி பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகள் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இந்த வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
கடும் போட்டி
தபால் வாக்குகள் எண்ணத்துவங்கியதும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. காங்கிரஸ் பாஜக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன.
எக்ஸிட் போல்ஸ்
இதனால், தொங்கு சட்ட சபை ஏற்படக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு அதிகம் என தெரிவித்தன.
பெரும்பான்மையை தாண்டி
ஆனால் சற்றுமுன் நிலவரப்படி பாஜக 116 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக அதையும் தாண்டி 116 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
கூட்டணிக்கு இடமில்லை
முன்னதாக பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான சதானந்தா கவுடா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
எந்த கட்சியின் உதவியும் இன்றி
எந்த கட்சியின் உதவியும் இன்றி பாஜக கர்நாடகாவில் ஆட்சியமைக்கும். இவ்வாறு பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.