For Quick Alerts
For Daily Alerts
Just In
300-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிப்போம்... ஆட்சியை தக்க வைப்போம்... அமித்ஷா அதிரடி பேச்சு
அகர்தாலா: நாடாளுமன்ற தேர்தலில் 300 க்கும் மேற்பட்ட இடங்களை வென்று, ஆட்சியை கைப்பற்றுவோம் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் பா.ஜ.க நிர்வாகிகளை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து மீட்டது பா,.ஜ.க. இங்கு தற்போது பிரதமர் மோடியின் அலை வீசுகிறது.
வரப்போகும் லோக் சபா தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களில் 21-க்கும் அதிகமான எம்.பி.க்களையும், மேற்குவங்க மாநிலத்தில் 23-க்கும் அதிகமான எம்.பி.க்களையும் பெறும்.
பா.ஜக. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என்றார்.
Comments
English summary
BJP national president Amit Shah has said that Party will win more than 300 seats in the parliamentary election.