தற்கொலை செய்ததை ஃபேஸ்புக்கில் லைவ் செய்த ரத்தப் புற்று நோயாளி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நபர் தான் தற்கொலை செய்ததை ஃபேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி பகுதியை சேர்ந்தவர் அரிந்தம் தத்தா. விவாகரத்தான அவர் சிலிகுரிக்கு இடம் பெயர்ந்து அங்கு இன்டர்நெட் மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
அரிந்தம் தத்தாவுக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நோய் பாதித்த பிறகு அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். தனியாக வசித்து வந்த அவருக்கு ஆறுதல் கூற கூட யாரும் இல்லை.
இந்நிலையில் சனிக்கிழமை அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் தற்கொலை செய்வதை ஃபேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார். அவர் ஃபேஸ்புக் லைவை துவங்கியதும் அவர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க நண்பர்கள் சிலர் அவருக்கு போன் செய்துள்ளனர். ஆனால் அவர் போன் அழைப்பை ஏற்கவில்லை.
கொல்கத்தாவில் செய்தியாளராக இருக்கும் தனது நண்பர் முகமது ஆலமுக்கு தத்தா போன் செய்ய முயன்றுள்ளார். தத்தாவை மூன்று வாரங்களுக்கு முன்பு தான் கொல்கத்தாவில் சந்தித்ததாக ஆலம் தெரிவித்துள்ளார்.