மருத்துவமனை கேண்டீன் சூப்பில் ரத்தக்கறை படிந்த பஞ்சு.. அதிர்ந்த நோயாளிகள்!
புனே: மருத்துவமனை கேண்டீனில் நோயாளி சாப்பிட்ட சூப்பில் ரத்தக்கறை படிந்த பஞ்சு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேவை சேந்தவர் மகேஷ் சத்புட். கர்ப்பிணியான இவரது மனைவியை கடந்த 29ஆம் தேதி அங்குள்ள ஜெகாங்கீர் மருத்துவமனையில் அனுமதித்தார். அன்றைய தினமே மகேஷின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் மேலும் சில நாட்கள் தங்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் மருத்துவமனையில் தாயும் சேயும் இருந்தனர்.
உயர்ஜாதியினர் முன்பு சரிக்கு சமமாக அமர்ந்து சாப்பிட்ட தலித் இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை
வெஜ் சூப்
நேற்று மகேஷின் மனைவிக்கு வெஜ் சூப் வாங்கித்தருமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து மருத்துவமனை கேண்டீனினல் வெஜ் சூப் வாங்கிக்கொடுத்துள்ளார் மகேஷ்.
சூப்பில் ரத்தக்கறை படிந்த பஞ்சு
இதனை மகேஷின் மனைவி குடித்தபோது அதில் ரத்தக்கறை படிந்த பஞ்சு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைத்தொடர்ந்து சூப்பில் ரத்தக்கறை படிந்த பஞ்சு கிடப்பதை வீடியோவாக எடுத்த மகேஷ் அதனை மருத்துவமனை நிர்வாகத்திடம் காண்பித்து முறையிட்டார்.
மருத்துவமனை பெயருக்கு களங்கம்
அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனைக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே சில ஊழியர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தது.
போராட்டம்
இருப்பினும் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து நோயாளியின் உறவினர்களிடம் விளக்கமளித்துள்ளதாக கூறியுள்ளது. தற்போது ஜெகாங்கீர் மருத்துவமனை ஊழியர்கள் 350க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.