For Daily Alerts
Just In
கர்நாடகாவில் துயரம்.. கார்வார் அருகே கடலில் படகு மூழ்கி 16 பேர் பலி
கார்வார்: கர்நாடக மாநிலம் கார்வார் அருகே கடலில் படகு மூழ்கியதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மொத்தம் 24 பேருடன் அந்தப் படகு கடலில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்திய கடற்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
24 பேரில் 16 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து காளி ஆற்றில் உள்ள கார்வார் பாலப் பகுதியிலும் உடல்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மீட்புப் பணியில் கோவாவிலிருந்து கடற்படையின் சேட்டக் ரக ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Comments
English summary
An overloaded boat was capsized near Karwar sea and 16 were dead in the accident.
Story first published: Monday, January 21, 2019, 19:09 [IST]