குஜராத்தில் கெமிக்கல் தொழிற்சாலை அருகே கொத்து கொத்தாக செத்து மடிந்த மான்கள், பறவைகள்!
குஜராத்தில் கெமிக்கல் தொழிற்சாலை அருகே கொத்து கொத்தாக மான்கள், பறவைகள் செத்து மடிந்தன.
Recommended Video
பாவ்நகர்: குஜராத்தின் பாவ்நகரில் கெமிக்கல் தொழிற்சாலை அருகே மான்கள், பறவைகள் கொத்து கொத்தாக செத்து மடிந்து கிடந்தது பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
குஜராத்தின் பாவ்நகரில் அனல்மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாவ்நகரில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள பால் பகுதியில் மான்கள், பறவைகள் கொத்து கொத்தாக மடிந்து கிடந்தன.
அப்பகுதியில் கெமிக்கல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அருகே உள்ள குட்டையில் நீர் குடித்ததால்தான் மான்கள், பறவைகள் செத்து விழுந்தன.
அதுவும் மான்கள் சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்ட இடம் பால் பகுதி. இப்பகுதியில் ஏராளமான மான்கள் நடமாட்டத்தைக் காண முடியும். தற்போது விலங்குகளும் பறவைகளும் கெமிக்கல் கழிவுகள் கலந்த குடிநீரை குடித்து மாண்டு போயிருக்கின்றன.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.