கொலை செய்து அட்டை பெட்டியில் அடைக்கப்பட்ட மும்பை ஓவியர், வழக்கறிஞர்- 3 பேர் கைது
மும்பை: மும்பையில் பிரபல ஓவியரும், கலை நிபுணருமான ஹெம உபத்யாய் மற்றும் அவரது வழக்கறிஞர் ஹரிஸ் பாம்பானி ஆகியோர்
கொலை செய்யப்பட்டு இருவரது உடலும் அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுபர்பான் கண்டிவலி பகுதியில் சாக்கடை ஒன்றின் அருகே சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை கிரிமினல் போலீசார், சடலங்களை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம் பரோடாவில் பிறந்த ஹேமா உபத்யாய், தன்னுடைய கணவரும் சக கலைஞருமான சிட்டன் என்பவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிகள் ஏற்கனவே விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தனர்.
கணவர் சிட்டன் மீது கடந்த 2013 இல் வன்கொடுமை வழக்கு தொடுத்த ஹேமா, கணவர் ஆபாசமாக வரைவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். அந்த வழக்கில் ஓவியர் ஹேமாவிற்கு ஆதரவாக கொலை செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் ஹரிஸ் பாம்பானி ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.