பெண்ணைக் கொன்று துண்டு துண்டாக்கி குப்பையில் போட்ட கொடூரர்கள்
ரேபரேலி: உத்திரப்பிரதேசத்தில் குப்பை கூளங்களுக்கு இடையே பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக மீட்கப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் மில் ஏரியா பகுதியில் குப்பைகளை சேகரித்து கொட்டும் இடத்தில் பெண் ஒருவரின் உடல் பாகங்கள் துண்டுத் துண்டாக கிடந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடல் பாகங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பெண் பலாத்காரம் செய்து கொல்லப் பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
குப்பைகளுக்கிடையே பெண்ணின் உடல் துண்டு துண்டாக மீட்கப் பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.