புனே சாலைகளை தேசிய கொடியால் போர்த்திய மாணவர்கள்.. பிரமித்த மக்கள்.. தேசபக்தியில் கலக்கிய ஐஐடி!
Recommended Video
புனே: தார் ரோடு முழுக்க தேசிய கொடியை போர்த்தி வைத்தது போல இருந்தது.. அந்த அளவுக்கு புனே மாணவர்கள் ஒன்றுகூடி தேசிய கொடியுடன் மெகா பேரணி நடத்தி தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. 71-வது குடியரசு தின விழா என்பதால் இதற்கான கொண்டாட்டங்கள் நேற்று முதல் பல பகுதிகளில் நடந்து வருகின்றன.
இதில் நாடே வியந்து பார்த்தது புனேவில் இந்திய இன்ஸ்டிடியூட் மாணவர்களின் ஒற்றுமையைதான்.. மொத்தம் 4 ஆயிரம் மாணவர்கள் ஒன்றுகூடி தேசிய கொடியுடன் பேரணி நடத்தினர்..
Mumbai: Students of the Indian Institute of Technology (IIT) Bombay took out a tricolor march in the campus yesterday. #RepublicDay (25.01.20) pic.twitter.com/kWsC6bebsr
— ANI (@ANI) January 26, 2020
அந்த மெகா மூவர்ண கொடியால் புனேவே அழகு பூண்டது.. பிரதான சாலையில் மாணவர்கள் சத்ரவதி சிவாஜி மகாராஜ், ராஜ்மதா ஜிஜாவ், தனாஜி மாலுசரே ஆகியோரின் உருவப்படங்களை தத்ரூபமாக உருவாக்கினர்.. இதில், தேசிய கொடியை மாணவர்கள் சாலையில் எடுத்து செல்லும் போட்டோக்களை ஏஎன்ஐ வெளியிட்டிருந்தது.
டெல்லி குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் கிராமிய கலைகளை பறைசாற்றியபடி வந்த அய்யனார்
இதை பார்க்கும்போது, தார் ரோடு முழுவதும் தேடிய கொடி போர்த்தப்பட்டதை போல சிலிர்ப்பாக தென்பட்டது.. இதை கண்ட அம்மாநில மக்களே மூக்கின் மீது விரலை வைத்து கொண்டனர். ஐஐடி மாணவர்களின் மிகச்சிறந்த தேசபக்தியை இது வெளிக்காட்டியதுடன் அனைவரையும் புல்லரிக்க செய்துவிட்டது.