For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தன்னம்பிக்'கை'யுடன் கால்களால் ப்ளஸ் 2 தேர்வு எழுதியவர் 71% மார்க் பெற்று தேர்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில் கால்களால் ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர் 71 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள போகாவ்ன் கிராமத்தை சேர்ந்தவர் அஜய் குமார்(16). அஜய்க்கு பிறப்பிலேயே இரு கைகளும் கிடையாது. கைகள் இல்லாவிட்டாலும் அவருக்கு ஆண்டவன் தன்னம்பிக்கையை டன் கணக்கில் அளித்துள்ளார்.

Boy who wrote +2 exams with legs score 71%

பிற குழந்தைகளை போன்று பள்ளிக்கு சென்ற அஜய் கால்களால் எழுதக் கற்றுக் கொண்டார். அவர் ப்ளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியானது.

இதில் அஜய் குமார் 71.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். அஜய் கால்களால் பேனாவை பிடித்து எழுதுவது மட்டும் அல்ல லேப்டாப்பையும் பயன்படுத்துகிறார்.

கால்களால் அற்புதம் செய்யும் அஜய் குமாருக்கு என்ஜினியர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A 16-year old boy who wrote +2 exams with his legs has scored 71 percent marks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X