ஒலியைவிட வேகமாக பாயும் ஏவுகணை சோதனை வெற்றி
கொல்கத்தா: ஒலியை விட வேகமாக விண்ணில் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணை சோதனை நாட்டின் பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். கொல்கத்தாவில் நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் கார்வாரில் நடந்த இந்த சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. நேற்று நடந்த சோதனையின்போது 293 கிலோ மீட்டர் தூரம் விண்ணில் ஒலியைவிட வேகமாக பாய்ந்து குறிப்பிட்ட இலக்கை இந்த ஏவுகணை தாக்கியது.
இந்த போர்க்கப்பல் அடுத்த மாதம் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. அப்போது அது ஒரே நேரத்தில் 16 பிரமோஸ் ஏவுகணைகளை விண்ணில் செலுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் வகையில் பல்வேறு கட்ட சோதனைகள் போர்க்கப்பலில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்திய கடற்படை இந்த போர்க்கப்பலில் ரஷ்யாவின் தல்வார் கிளாஸ் கப்பல் உள்பட பிரமோஸ் ஏவுகணை கருவிககளை பொறுத்தியுள்ளது. பிரமோஸ் ஏவுகணை நீர்மூழ்கி கப்பலிலும் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாக கடற்படை அறிவித்து உள்ளது.