For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலியை முறத்துல துரத்துனது பழசு.. சிங்கத்தை பிரம்பால விரட்டுறது புதுசு.. வைரல் வீடியோ!

கன்றுக்குட்டியைப் பாதுகாக்க சிங்கத்தை நேருக்கு நேர் நின்று விரட்டிய விவசாயியின் வீடியோ வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத்தில் கன்றுக்குட்டியைக் காப்பாற்ற விவசாயி ஒருவர் சிங்கத்தை பிரம்பால் அடித்துத் துரத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

பழங்காலத்தில் புலி ஒன்றை வீரத் தமிழச்சி ஒருவர் முறத்தால் அடித்து விரட்டினார் என்ற கதையை நாம் கேட்டிருப்போம். அது எந்தளவுக்கு சாத்தியம் என நம்மில் பலருக்கு சந்தேகமும் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், மனதில் துணிவிருந்தால் மெல்லிய குச்சியால் கூட பெரிய மிருகங்களை பயப்பட வைக்க முடியும் என்பதை குஜராத்தில் நடந்த இந்தச் சம்பவம் வீடியோ ஆதாரத்துடன் நமக்குக் காட்டுகிறது.

சிங்கம்:

சிங்கம்:

சிங்கங்களுக்கு பேர் போனது குஜராத்தின் கிர் வனப்பகுதி. அதன் அருகில் உள்ளது அம்ரேலி.நேற்று முன்தினம் இரவு, அங்கு கால்நடைகளை வேட்டையாடுவதற்காக சிங்கம் ஒன்று வந்துள்ளது. அப்போது கன்றுக்குட்டி ஒன்றை தாக்க முற்படுகிறது அந்த சிங்கம்.

பிரம்படி:

பிரம்படி:

சத்தம் கேட்டு ஓடி வந்த வாதர் என்ற விவசாயி, சிங்கத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். கையில் பிரம்புடன் அவர் கூச்சல் போடுகிறார். பின்னர் சிங்கத்தை நோக்கி அவர் பிரம்பை வீச, அது திரும்பி ஓடுகிறது. இந்தக் காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

கோபம்:

கோபம்:

இந்த சம்பவம் தொடர்பாக வாதர் கூறுகையில், "நான் வீசிய பிரம்பு சிங்கத்தின் தலையில் பட்டது. அதனால் அது கன்றுக்குட்டியை அப்படியே விட்டு விட்டு எனது வீட்டின் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி ஓடி விட்டது. சம்பந்தப்பட்ட கன்றுக்குட்டி பிறந்து ஐந்து மாதம் தான் ஆகிறது. எனக்கு மிகவும் பிடித்த அந்த கன்றுக்குட்டியை சிங்கம் தாக்குவதைக் கண்டு எனக்கு கடும் கோபம் வந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

வேதனை:

வேதனை:

இப்படி சிங்கம் ஊருக்குள் புகுந்து தாக்குவது அப்பகுதியில் ஒன்றும் புதிதல்ல. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சிங்கங்கள் ஊருக்குள் வந்து கால்நடைகளை வேட்டையாடுவது வழக்கம் தானாம். அந்தப் பகுதியில் நான்கு சிங்கங்கள் இருக்கிறதாம். சிங்கங்களோடு வாழ்க்கை நடத்துவதே தங்களுக்கு வாடிக்கையாகி விட்டது என வேதனையோடு கூறுகிறார் வாதர்.

 வைரல் வீடியோ:

வைரல் வீடியோ:

எனினும், கன்றுக்குட்டிக்காக தனது உயிரை பணயம் வைத்து சிங்கத்தை நேருக்கு நேர் சந்தித்த விவசாயியின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இணையத்தில் இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

English summary
This is one of the best videos to watch today, where a brave farmer used only a stick to defend himself as he chased off a vicious lion attacking his cows in Gujarat's Amreli city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X