மணாலியில் மணக்கோலத்தில் பணமாலையுடன் வாக்களிக்க வந்த மாப்பிள்ளை!
மணாலி: ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி நாடாளுமன்றத் தொகுதிக்கு மணக்கோலத்தில் மாப்பிள்ளை ஒருவர் பணமாலையுடன் வாக்களிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டில் உள்ள 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் இன்று லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. எல்லா இடங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி தொகுதியில் 8ஆவது வாக்குச் சாவடி மையத்துக்கு மணக்கோலத்தில் வந்தார் மணமகன். அவருடன் அவரது குடும்பத்தினரும் வந்தனர்.
Himachal Pradesh: A bridegroom along with his family casts his vote at polling booth number 8 in Manali parliamentary constituency. pic.twitter.com/N6viD4NJtT
— ANI (@ANI) 19 May 2019
மணமகன் உள்பட அனைவரும் பணமாலை அணிந்து கொண்டு வாக்களித்தனர். இதை அங்கிருந்த வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பலே பலே.. ரூ.20 டோக்கன் போய் இப்போ ரூ.2.000 ஜெராக்ஸ் டோக்கன்.! செந்தில் பாலாஜி மீது புகார்
இன்னும் சிலரோ பணம் இருக்கிறது என்பதற்காக இப்படியா அலப்பறை செய்வது என மனதிற்குள் கேட்டுக் கொண்டனர்.