1,50,000 கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி... பட்ஜெட்டில் ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு
ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி செய்து தர மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களுக்கு அடுத்து ஆண்டிற்குள் பிராட்பேண்ட் வசதி செய்து தர மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட்டில் அடுத்த ஆண்டிற்குள் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி கொண்டு வர நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் அதிவிரைவு பிராட்பேண்ட் இணைப்புகளை கொண்டு வர 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் பிராட்பேண்ட் வசதி கொண்டு வரப்படும் என்றும் அருண் ஜேட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
இதுதவிர, எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தி மையமாக இந்தியா மாற்றப்படும் என்றும் அதற்கு உதவும் வகையில் எலக்ட்ரானிக் துறைக்கு 745 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.