விமான எரிபொருள் மீதான உற்பத்தி வரி 6% உயர்வு... எட்டா கனவாகும் விமான பயணம்
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் விமான எரிபொருள் மீதான உற்பத்தி வரி 6% உயர்த்தப்பட்டுள்ளதால் விமான கட்டணங்கள் அதிக அளவு உயர வாய்ப்புள்ளது.
அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட்டில், ஜெட் விமான எரிபொருள் மீதான உற்பத்தி வரி 8%-ல் இருந்து 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களுக்கு இந்த வரி உயர்வு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே விமானங்களை இயக்குவதற்கான செலவில் 40% எரிபொருளுக்கு ஆகிறது; ஆகையால் எரிபொருள் மீதான உற்பத்தி வரியை குறையுங்கள் என்பது விமான நிறுவனங்களின் புலம்பல். தற்போது விமான எரிபொருள் மீது உற்பத்தி வரி 6% உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் விமான கட்டணங்களும் கணிசமாக அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கும் போது விமானத்தில் பயணம் மேற்கொள்வது என்பது கனவாகிப் போய்விடும்.