For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கட்டிடத்தில் குண்டு வெடிப்பு.. குண்டு தயாரிக்க முயன்றபோது வெடித்ததா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கன்னூர் நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகருக்கு சொந்தமான கட்டிடத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும் எப்போதுமே மோதல்தான். இரு தரப்பிலும் பல கொலைகள் நடந்துள்ளன.

Building owned by RSS worker damaged in a blast in Kannur

பினராயி விஜயன் தலைமையிலான அரசு அமைந்த பிறகுதான், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அதிக அளவில் படுகொலை செய்யப்படுவதாக பாஜக தலைமையே நேரடியாக கோதாவில் குதித்து கண்டன பேரணிகளை நடத்தியது. அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் என பாஜகவின் மேல்மட்ட பிரபலங்கள் கேரளாவில் முற்றுகையிட்டனர்.

இந்த நிலையில், கன்னூர் மாநிலத்திலுள்ள வலயங்கதன் ரகு என்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டருக்கு சொந்தமான பில்டிங் ஒன்றில் இன்று பயங்கர சத்தத்தோடு குண்டு வெடித்தது.

தகவல் அறிந்ததும் போலீசார் அந்த கட்டிடத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தத சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், கட்டிடத்திற்குள் இருந்து வெடிமருந்து சுமார் அரை கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

குண்டு தயாரிக்க வலயங்கதன் ரகு இந்த வெடிமருந்துகளை சேமித்து வைத்திருந்தாரா என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary
Building owned by RSS worker Valayangadan Raghu damaged in a blast in Kannur. Police seized half kg gunpowder from the building.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X