For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அட அப்ரசண்டிகளா, இன்று நீங்க லீவு எடுக்க 'தல' டோணி தான் கிடைச்சாரா?

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: இன்று இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதிப் போட்டியை காண ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்க கேப்டன் டோணியே பரிந்துரைக்கும் போலி கடிதம் சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் டோணி தலைமையிலான இந்திய அணி ஆடும் ஒவ்வொரு ஆட்டமும் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி சிட்னி நகரில் இன்று நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்துவிட்டது. டோணி தற்போது களத்தில் உள்ளது தான் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

Bunking Work for the Match? Use This Letter 'Signed by MS Dhoni'

இந்த போட்டியை காண இந்திய ரசிகர்கள் பலர் இன்று அலுவலகத்திற்கு செல்லவில்லை. பாட்டி இறந்துவிட்டார், மாமாவுக்கு மாரடைப்பு, எனக்கு காய்ச்சல், வயிற்றுவலி, தலைவலி என்று பலரும் பல பொய்கள் கூறி இன்று விடுப்பு எடுத்துவிட்டு வீட்டில் ஹாயாக அமர்ந்து போட்டியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்குமாறு பரிந்துரைத்து கூல் கேப்டன் டோணி ஒரு கடிதத்தை எழுதி அதில் தனது கையெழுத்தும் போட்டுள்ளது போன்ற போலி கடிதம் சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளது.

English summary
A fake letter with captain Dhoni's signature, recommending bosses to excuse their reportees today as they have an important duty to cheer the Men in Blue is doing rounds in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X