For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹிமாச்சல பிரதேசத்தில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி

ஹிமாச்சல பிரதேசத்தில் இரு சக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதாக திருப்பிய பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

Google Oneindia Tamil News

மண்டி: ஹிமாச்சல பிரதேச மண்டி மாவட்டம் அருகே ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலியாகினர். இதில் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

மண்டி மாவட்ட மணாலி நகரிலிருந்து குலுவுக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தினை, பியஸ் ஆற்றுப்பாலத்தில் வந்த இரு சக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக அதன் ஓட்டுநர் திருப்பினார்.

Bus accident claims 18 in Himachal Pradesh

அப்போது அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 14 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மேலும், காயமுற்ற 3 பேர் மண்டி மருத்துமனையில் சிகிச்சை பலனின்றியும், சிம்லா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மற்றொருவரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்த 24 பேர் மண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்துக் குறித்து தகவல் அறிந்த போலீசாரும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரிதமாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்திர சிஙää; இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதுடன் பலியானவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Shimla: As many as 18 passenger were killed and 23 injured when a private bus proceeding from mandi to kullu-manali.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X