கர்நாடக பந்த் எதிரொலி: பெங்களூருவில் இயங்கியவை எவை? முடங்கியவை எவை?
பெங்களூரு: மேகதாது பகுதியில் கர்நாடகா அணை கட்டுவதை தமிழகம் எதிர்க்கிறது. இதை எதிர்த்து கர்நாடா பந்த் இன்று நடந்தது.
கர்நாடக பந்த்தையடுத்து பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை எவையெல்லாம் இயங்கின எவையெல்லாம் முடங்கின என்பது பற்றி ஒரு பார்வை:
*பெங்களூரு நகர பஸ்கள், கேஎஸ்ஆர்டிசி பஸ்கள். குறிப்பாக, தமிழகத்துக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
*பெங்களூரு நகரில் ஆட்டோ, டாக்சி ஓடவில்லை. அந்தந்த சங்கங்கள் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
* பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு சப்ளை வழங்கப்படவில்லை.
* திரையரங்குகள், மால்கள் மூடப்பட்டிருந்தன. சினிமா சூட்டிங் நடக்கவில்லை.
* பள்ளி, கல்லூரிகளை மூடுவதற்கு வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே அவை அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
* பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்தது
* பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.
இயங்கியவை:
*மருத்துவமனைகள் வழக்கம்போல இயங்கின. மெடிக்கல்கள் திறந்திருந்தன.
* ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு சேவை வாகனங்கள் வழக்கம்போல இயங்கின.
* வங்கிப் பணிகள் வழக்கம்போல நடைபெற்றன.