பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசு அமையும்... 5 மாநிலங்களின் நிலவரம் என்ன? சி வோட்டர் எக்ஸிட் போல்
பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த சி வோட்டரின் எக்ஸிட் போல் முடிவுகள் விவரம்.
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு அமையும் என சிவோட்டர் நடத்திய வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. வரும் 11-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இம்மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்கிற வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை சிவோட்டர் வெளியிட்டுள்ளது.
இதில் சி வோட்டர் நிறுவனமானது பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு அமையும் என தெரிவித்துள்ளது. பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல்கள் தொடர்பாக சி வோட்டர் நடத்திய வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்:
சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகள்:
உத்தரகாண்ட்
பாஜக 29-35
காங்கிரஸ் 29-35
மற்றவை 2-9
கோவா
பாஜக 15-21
காங்கிரஸ் 12-18
ஆம் ஆத்மி 0-4
மற்றவை 2-8
பஞ்சாப்:
காங்கிரஸ் 41-49
அகாலிதள்- பாஜக 5-13
ஆம் ஆத்மி 59-67
மற்றவை 0-3
மணிப்பூர்
காங்கிரஸ் 17-23
பாஜக 25-31
இதர 9-15