எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை... பாஜக தனிப்பெரும் கட்சி: சி வோட்டர்
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்றும் தொங்கு சட்டசபையே அமையும் என்று சி வோட்டர் கருத்து கணிப்பு கூறியுள்ளது.
பெங்களூர்: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் தொங்கு சட்டசபையே அமையும் என்றும் சி வோட்டர் கருத்து கணிப்பு கூறியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் , பாஜக , மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடும் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் 75 சதவீத வாக்கு பதிவு நடைபெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை ஆங்கில செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன.
சி வோட்டர் எடுத்த கருத்து கணிப்புகளில் மொத்தம் 222 தொகுதிகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளது. பாஜக 103 இடங்களிலும், காங்கிரஸ் 93 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சிக்கு 25 இடங்களிலும் , மற்றவை ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.
எனவே இந்த கணிப்புகளின் படி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. ஆகையால் தொங்கு சட்டசபை ஏற்படும் போது ஜேடிஎஸ் கட்சி எந்த கட்சிக்கு ஆதரவு தருகிறதோ அந்த கட்சியே வெல்லும் என தெரிகிறது.