தாய் குளிப்பதை வீடியோ எடுத்த நண்பன்.. மது வாங்கி கொடுத்து கழுத்தறுத்து கொன்ற வாலிபர்!
Recommended Video
ஹைதராபாத்: தாய் குளிப்பதை எட்டிப் பார்த்து வீடியோ எடுத்த தனது நண்பனை கத்தியால் கழுத்தையறுத்து கொன்ற, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத், சந்தாநகர் பகுதியை சேர்ந்தவர் அஜய்குமார் (21), கார் டிரைவர். இவரும், சம்பத் குமார் (23) என்பவரும் சிறு வயது முதல் நண்பர்களாம். இதனால் சம்பத் குமார் வீட்டுக்கு அஜய் குமார் அடிக்கடி வருவது வழக்கம்.
ஒருநாள் இப்படி வந்திருந்தபோது, பாத்ரூமில் சம்பத் குமார் தாய் குளித்துக்கொண்டிருந்தார். இதை கதவு வழியாக எட்டிப் பார்த்த அஜய் குமார், அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்த விஷயம் எப்படியோ சம்பத் குமாருக்கு தெரியவந்தது. எனவே தனது நண்பனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். சம்பவத்தன்று, ஒரு பாரில் இருவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் சம்பத் தனது ஸ்கூட்டரில் அஜயை ஏற்றிக்கொண்டு சந்தாநகர் பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கே வைத்து, தனது தாய் குளிப்பதை எட்டிப் பார்த்த விவகாரம் குறித்து அஜயிடம் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த சம்பத், தனது நண்பன் அஜய் கழுத்தை அறுத்துள்ளார். சுமார் 10 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதை அப்பகுதியினர் பார்த்து ஓடி வந்தனர். அதற்குள் சம்பத் குமார் தப்பியோடிவிட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அஜய்குமார் இறந்துவிட்டார். அஜய் குமார் தந்தை டேனியல் அளித்த புகாரின் பேரில் சம்பத் குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்களும் இருக்கலாம் என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.