கன்னடம் பேசும் மக்களுக்கு பணியில் முன்னுரிமை கொடுத்த சித்தார்த்தா.. டிரென்டாகி வரும் #CafeCoffeeDay
Recommended Video
டெல்லி: காபி டே உரிமையாளர் சித்தார்த்தாவை காணவில்லை என்ற தகவலை அடுத்து Cafe Coffee Day டுவிட்டரில் டிரென்டாகி வருகிறது.
காபி டே நிறுவனத்தின் உரிமையாளரான சித்தார்த்தாவுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் கஃபேக்களை விஸ்தரித்த சித்தார்த்தா நேற்று மாலை நேத்ராவதி ஆற்றுக்கு சென்றவர் திரும்பவில்லை.
இந்த நிலையில் டுவிட்டரில் #CafeCoffeeDay என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது.
மைன்ட் ட்ரீ நிறுவன பங்குகளை விற்பனை செய்ததில் மிரட்டப்பட்டாரா 'காபிடே' சித்தார்த்தா?
|
முக்கியத்துவம்
இந்தியாவில் உள்ள எந்த காபி டே கடைக்கு சென்றாலும் அங்கு சிக்மக்ளூர், ஹாசன், ஷிமோகா ஆகிய இடங்களை சேர்ந்த ஒருவராவது அங்கு இருப்பார். கன்னடம் பேசும் மக்களுக்கு பணி வழங்குவதில் முக்கியத்துவம் அளிப்பார் சித்தார்த்தா.
|
பதில் அளிக்க முடியவில்லை
ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வழங்கிய சித்தார்த்தா, தனது காபி டே நிறுவனத்தை தேசிய பிராண்டாக மாற்றினார். சித்தார்த்தாவின் எழுச்சி, எஸ்எம் கிருஷ்ணாவின் ஆட்சியின் கீழ் சலுகைகள் பெற்றும் செல்வத்தை கொழித்தவர்களின் சிக்கலான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை.
|
ஜொமாட்டோ
கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் காபி டேவுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தேன். ஆனால் ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட செயலிகள் எப்போது சந்தையில் நுழைந்ததோ அப்போதிலிருந்து நான் நேராக செல்வதை விட்டு விட்டேன்.
|
சோகம்
டீ குடித்து வந்த இந்தியாவை காபி பக்கம் திருப்பிய சித்தார்த்தாவுக்கு கஷ்ட காலங்களில் யாரும் உதவாதது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. காபி டேவுக்கு இருண்ட காலம்.