For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போதையில் பிரசவம் பார்த்த ஆண் நர்ஸ்.. சிசுவின் காலை இழுத்ததால் தலை துண்டான கொடூரம்!

ஆண் நர்ஸ் பிரசவம் பார்த்ததால் குழந்தையின் தலை துண்டாகிவிட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    போதையில் பிரசவம் பார்த்த ஆண் நர்ஸ், சிசுவின் தலை துண்டான கொடூரம்! -வீடியோ

    ஜெய்ப்பூர்: இப்படிக்கூட எங்காவது நடக்குமா? பெண்ணுக்கு ஆண் நர்ஸ் ஒருவர் போதையில் பிரசவம் பார்க்க போய், அந்த குழந்தை ரொம்ப கொடூரமாக இறந்தே போய்விட்டது.

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி திலோக்பதி - தீக்ஷா கன்வர். இவர் நிறைமாத கர்ப்பிணி என்பதால், போன வாரம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

    இதனால் திலோக்பதி ராம்காரில் உள்ள அரசு சுகாதார மையத்தில் மனைவியை கொண்டு போய் சேர்த்தார். ஆனால் பணியில் டாக்டர் இல்லை. வெளியே சென்றிருந்தார். அதே சமயத்தில் பெண் நர்சுகளும் அங்கு இல்லை.

    செம போதை

    செம போதை

    ஆண் நர்ஸ் அமிர்த்லால்தான் அங்கு இருந்தார். கூடவே ஒரு உதவியாளரும் இருந்தார். இரண்டு பேருமே செம போதையில் இருந்தனர். வலியால் பெண் துடிப்பதை பார்த்ததும், உடனே தானே பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். பொதுவாக பிரசவத்தின்போது குழந்தையின் தலைதான் முதலில் வரும். ஆனால் இந்த பெண்ணுக்கு குழந்தையின் கால் வந்தது.

    கர்ப்பப்பையில் தலை

    கர்ப்பப்பையில் தலை

    உடனே போதையில் இருந்த ஆண் நர்ஸ், மற்றும் உதவியாளர் இருவரும், அந்த காலை பிடித்து வேகமாக வெளியே இழுத்தனர். இதனால் குழந்தையின் உடல் துண்டாகிவிட்டது. அதாவது குழந்தையின் உடல் வந்துவிட்டது, தலை மட்டும் கர்ப்ப பையிலேயே தங்கிவிட்டது. வெளியே வந்து விழுந்த உடல் தலையில்லாமல் துடித்துடித்து இறந்தது.

    சிக்கலா இருக்கு

    சிக்கலா இருக்கு

    பிரசவித்த பெண்ணும் மயக்கமாகிவிட, அந்த குழந்தையின் உடலை இருவரும் எடுத்து கொண்டு போய் பிணவறையில் மறைத்து வைத்துவிட்டு வந்துவிட்டார்கள். பிறகு மனைவிக்கு என்னாகுமோ என்று பயந்தபடி காத்துகிடந்த கணவனிடம், "பிரசவம் கொஞ்சம் சிக்கலா இருக்கும் போல இருக்கு. அதனால, ஜோத்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்டுங்க" என்று சொல்லி இருக்கிறார்கள்.

    தலையை வெளியே எடுத்தனர்

    தலையை வெளியே எடுத்தனர்

    உடனே கணவரும் மயங்கி கிடந்த மனைவியை ஜோத்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைக்கு தலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக பெண்ணுக்கு ஆபரேஷன் செய்தார்கள். தலையை மட்டும் வெளியே எடுத்தார்கள். இதுகுறித்து விசாரித்தபோதுதான், ராம்கார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    குழந்தை உடல் மீட்பு

    குழந்தை உடல் மீட்பு

    பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளிக்கவும், விரைந்து வந்த அவர்கள், ராம்கார் ஆஸ்பத்திரியின் பிணவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை மீட்டார்கள். இது சம்பந்தமான பிரசவம் பார்த்த 2 பேர் மீதும் அஜாக்கிரதையாக சிகிச்சை அளித்து மரணத்தை ஏற்படுத்துதல், பாதுகாப்பற்ற முறையில் ஆபத்தான சிகிச்சை அளித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கவலைக்கிடம்

    கவலைக்கிடம்

    ஆனால் இரண்டு பேருமே இப்போது எஸ்கேப் ஆகி உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.தலை வயிற்றுக்குள்ளேயே தங்கியிருந்ததால், பெண்ணின் நிலைமை ரொம்பவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    Baby decapitated botched delivery male nurse leaves head inside in Jaisalmar Govt. Hosptial in Rajasthan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X