For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகர் கமல்ஹாசன் மீது பெங்களூரில் வழக்கு: மகாபாரதத்தை அவமதித்ததாக சாமியார் புகார்

நடிகர் கமல்ஹாசன் மீது பெங்களூர் காவல்நிலையத்தில் பிராதானந்தா என்ற சாமியார் வழக்கு தொடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

பெங்களூரு: மகாபாராதத்தை அவமதித்ததாக நடிகர் கமல்ஹாசன் மீது பெங்களூரு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதானந்தா என்ற சாமியார் பெங்களூரு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப்பரீட்டை நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அதில் அரசியல், சினிமா, திராவிடம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

Case filed against Actor Kamal in Bengaluru Police station

அப்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல் மகாபாரதத்தை மேற்கோள் காட்டி விளக்கமளித்தார். இந்தியாவின் இதிகாசங்களின் ஒன்றான மகாபாரதத்தை கமல் அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடர்பாக கும்பகோணம் மற்றும் வள்ளியூர் நீதிமன்றங்கள் நடிகர் கமல்ஹாசன் மீது மகாபாரதத்தை அவமதித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த பிரதானந்தா என்ற சாமியார் பெங்களூரு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு குறித்து நடிகர் கமல்ஹாசனிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

English summary
Case filed against Actor Kamal in Bengaluru Police station about insulting Mahabharatham in a tv Show.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X