For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிகமாக ரூ.500 நோட்டுகள் அச்சிடப்படும்.. பணத்தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை!

இந்தியா முழுக்க திடீரென்று நிலவும் பணத்தட்டுப்பாட்டை குறைக்க 500 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அச்சிடப்பட உள்ளது என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஏ.டி.எம் மையங்களில் இரண்டாயிரம் ருபாய் நோட்டிற்கு கடும் தட்டுப்பாடு- வீடியோ

    டெல்லி: இந்தியா முழுக்க திடீரென்று நிலவும் பணத்தட்டுப்பாட்டை குறைக்க 500 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அச்சிடப்பட உள்ளது என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார்.

    இன்று காலையில் இருந்து இந்தியாவில் திடீர் என்று ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஹைதராபாத்தில் தொடங்கிய இந்த தட்டுப்பாடு தற்போது இந்தியா முழுக்க பரவி உள்ளது. தமிழகத்திலும் பல பகுதிகளில் இந்த தட்டுப்பாடு நிலவுகிறது.

    Cash Crunch: Government plans to print more Rs.500 notes says, Central Minister

    இதனால் மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்படுமா என்ற பதற்றம் உருவாகி உள்ளது. பீகார், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

    அதன்படி பணத்தட்டுப்பாட்டை குறைக்க 500 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அச்சிடப்பட உள்ளது என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார். 5 மடங்கு அதிகமாக 500 நோட்டுகள் ரூபாய் அச்சிடப்பட உள்ளது. இப்போதுவரை தினமும் 500 கோடி மதிப்பிற்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகிறது.

    ஆனால் இன்னும் இரண்டு நாட்களுக்கு தினமும் 2500 கோடி ரூபாய் மதிப்பிற்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட உள்ளது. இந்த மாதத்தில் மொத்தமாக அச்சிடப்படும் 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பு 70000-75000 கோடியாக இருக்கும் என்று சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார். இதனால் பணத்தட்டுப்பாடு குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Government plans to print more Rs.500 notes says, Central Minister SC Garg on Cash Crunch. Most of the ATMs are running out of money in India, creates Demonetisation panic. Many ATMs in India not dispatching 2,000 rupees note.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X