For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி வரைவு திட்டம்- தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்கள் பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு!

காவிரி நதி நீர் தொடர்பான வழக்கில் தமிழக, கர்நாடக வழக்கறிஞர்களுக்கு வரைவு அறிக்கையை மத்திய அரசு கொடுத்தது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது- வீடியோ

    டெல்லி : காவிரி நதி நீர் பகிர்வுக்கான மத்திய அரசின் திட்ட அறிக்கை குறித்து தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா மாநிலங்கள் பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் இன்று மாலை விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே, இரண்டு முறை திட்ட வரைவு அறிக்கை சமர்பிக்கப்படாமல் வழக்குத் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

    Cauvery Draft plan given to TN Karnataka Lawyers

    மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி.சிங் உச்சநீதிமன்றத்தில் காவிரி நதி நீருக்கான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தார். மேலும், காவிரி வாரியம் அல்லது குழு அமைக்கவும் மத்திய அரசு தயார் என்றும் உறுதி அளித்துள்ளார்.

    இந்த திட்ட வரைவு அறிக்கை கர்நாடக மற்றும் தமிழக வழக்கறிஞர்களிடமும் மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்த வரைவு திட்ட அறிக்கை குறித்து பதில் தர தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    English summary
    Cauvery Draft plan submitted on Supreme Court. Central Government Submits Draft plan to SC and the Copies were given to Karnataka and TN Lawyers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X