காவிரி ஆணையம் - அரசிதழின் நகல் இணையத்தில் வெளியானது
காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அதன் நகல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அதன் நகல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு இதை தாக்கல் செய்யாமல் இழுத்துக் கொண்டே வந்தது.
அதன் பின் பல முறை இழுத்தடித்து கடைசியாக திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வழக்கை ஒத்திவைத்தது. மேலும் வரைவு திட்டத்தை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆணைய அரசிதழின் நகல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அரசிதழில் வெளியான அறிவிப்பு தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டது. மேலும் அரசிதழ் சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள் அரசிதழில் உள்ளது. காவிரி வாரியத்தின் செயல்பாடு உள்ளிட்ட விவரம் அரசிதழில் உள்ளது. ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் செயல்படுவார். உறுப்பினர்கள் குறித்த விவரமும் நகரில் இடம்பெற்றுள்ளது.