காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்பலாம்..சொல்கிறார் தமிழக சட்ட அமைச்சர்
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்பலாம் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்பலாம் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்துக்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மே 14-ந் தேதிவரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது.
குடிநீருக்காக காவிரியிலிருந்து 4 டிஎம்சி தண்ணிர் திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிட தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
வாய் திறக்கவில்லை
காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது பற்றி எந்த உத்தரவும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. தொடர்ந்து உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கும் மத்திய அரசுக்குமே ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கருத்து தெரிவித்தார். அப்போது காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என அவர் கூறினார்.
நல்ல முடிவு வரும்
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்பலாம் என்றும் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். காவிரி வழக்கு தமிழகத்துக்கு நல்ல முடிவை தரும் நிலையை எட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
சிவி சண்முகம் கருத்து
தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் வரைவு செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருப்பதாகவும் அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளார்.