For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி நதி நீர் பங்கீடு.. கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்க கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு நடத்தியுள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்க கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு நடத்தியுள்ளனர்.

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் காவிரி மேலாண்மை வாரிய உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Cauvery Water Distribution: Tamilnadu farmers meet Karnataka CM

இன்னும் காவிரி வாரியம் தன்னுடைய பணியை தொடங்கவில்லை. இதனால் காவிரியில் இருந்த மே மாதம் வரவேண்டிய தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். பல சிறு, குறு விவசாயிகள் இதனால் இழப்பை சந்திக்கும் நிலையில் இருக்கிறார்கள்.

இதனால் தற்போது காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்க கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு நடத்தியுள்ளனர். காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து விவாதம் நடத்தியுள்ளனர்.

காவிரியில் இருந்த தமிழகத்திற்கு நீர் திறக்க தமிழக விவசாய சங்க கூட்டு நடவடிக்கை குழு முதல்வர் குமாரசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இன்று காலை நடிகர் கமல்ஹாசன் குமாரசாமியை சந்தித்தார்.

English summary
Cauvery Water Distribution: Tamilnadu farmers meet Karnataka CM Kumaraswamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X