For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு உறுப்பினர்கள் அறிவிப்பு- மத்திய அரசு அதிரடி!

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக பிரதிநிதியை நியமித்த மத்திய அரசு..வீடியோ

    டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவின் பிரதிநிதியையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. இந்த ஆணையத்துக்கான உறுப்பினரை கர்நாடகா அரசு அறிவிக்காமல் இழுத்தடித்தது.

    Cauvery water management authority formed

    இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்களை மத்திய அரசு இன்று அறிவித்தது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    கர்நாடகா உறுப்பினரை அறிவிக்காததால் அம்மாநில நீர்வளத்துறை நிர்வாக செயலாளர் பகுதி நேர உறுப்பினராக இருப்பார் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா பிரதிநிதிகள் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பர்.

    காவிரி ஒழுங்காற்று குழு

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்படும். இதேபோல் மத்திய நீர்வள ஆணைய பொறியாளர் நவீன் தலைமையில் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஒழுங்காற்று குழுவில் தமிழக அதிகாரிகள் செந்தில், கிருஷ்ண உன்னி ஆகியோர் இடம்பெற்றுள்ளார். கேரளாவின் ஜோஷி, புதுச்சேரியின் சண்முகசுந்தரம் ஆகியோரும் உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றனர். ஆனால் கர்நாடகா உறுப்பினர் இடம்பெறவில்லை.

    காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைமையகம் பெங்களூருவில் அமையும்.

    English summary
    The Centre today formed the Cauvery water management authority formed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X