For Daily Alerts
Just In
2ஜி வழக்கில் ஆ ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐயும் மேல்முறையீடு
2ஜி வழக்கில் ஆ ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐயும் மேல்முறையீடு செய்துள்ளது.
டெல்லி: 2ஜி வழக்கில் ஆ ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐயும் மேல்முறையீடு செய்துள்ளது.
நாட்டையே உலுக்கிய 2ஜி வழக்கில் சிபிஐ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்களை தாக்கல் செய்ய சிபிஐ தவறிவிட்டதாக கூறி நீதிபதி சைனி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 15 பேரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த நிலையில், 2 ஜி வழக்கில் ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து, அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்தது.
இதைத்தொடர்ந்து சிபிஐயும் 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
Comments
2g case judgement cbi appeal delhi high court 2ஜி வழக்கு தீர்ப்பு சிபிஐ மேல்முறையீடு டெல்லி உயர்நீதிமன்றம்
English summary
CBI also appeal in the Delhi high court on the judgement of 2G case.
Story first published: Tuesday, March 20, 2018, 15:22 [IST]