For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம்!

சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற மட்டுமே இதுவரை ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

CBSE has made it mandatory to submit Aadhaar details to register for the examination

இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அதன்படி2017-18 கல்வியாண்டு முதல் தேர்வுகளை எழுத 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளும் தங்கள் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆதார் எண் உட்பட அனைத்து ஆவணங்களையும் சிபிஎஸ்இ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆதார் எண் இல்லாத மாணவர்கள் தங்கள் ஆதார் எண்ணின் பதிவெண்ணை வழங்கலாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

தேர்வு எழுத முதல்முறையாக ஆதார் தகவல்களை சமர்ப்பிக்க சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
This is for the first time that the CBSE has made it mandatory to submit Aadhaar details to register for the examination.The CBSE has made it compulsory for candidates to submit their Aadhaar number to register for the board exams of Class 9 and 11 from 2017-18.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X