ஆ.. சிசிடிவி.. போட்ரா டான்ஸை..டான்ஸ் போட்டு போலீஸை கடுப்பாக்கிய திருடன்!
கொள்ளையும் அடித்துவிட்டு கேமிராவை பார்த்து டான்ஸ் ஆடி உள்ளான் ஒரு திருடன்.
Recommended Video
காந்தி நகர்: "என்ன என்ன ஐட்டங்களோ" என்ற ஆட்டைய போட்டுட்டு வடிவேலு பாடின பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது. அதுபோலவே ஒரு கொள்ளை... அதுபோலவே ஒரு டான்ஸ்... இந்த சம்பவம் நிஜமாகவே நடந்திருக்கு.
குஜராத் மாநிலம் காந்தி நகர் பக்கத்துல சர்கஸகன் என்ற கிராமம் இருக்கு. இங்க நிறைய குடும்பங்கள் இருக்கக்கூடிய ஒரு அப்பார்ட்மெண்ட் இருக்க. அதில ஒரு வீட்டில போன மாசம் ஒரு லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் கொள்ளை போய்விட்டது.
[நக்கீரன் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது!]
அடுத்தடுத்து கொள்ளை
இதுமட்டும் இல்லாம, அதே அபார்ட்மெண்ட்டில் இருக்கக்கூடிய வேற 2 வீடுகளிலும் நகை, பணம் என நிறைய பொருட்கள் கடந்த சனிக்கிழமையன்று கொள்ளை போயின. அடுத்தடுத்து கொள்ளை இந்த அபார்ட்மெண்ட்டில் நடப்பதால் போலீசார் துரிதமாக வேலையில் இறங்கினர். அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
கேமரா இருக்கிறதா?
அப்போது ஒரு கும்பல் வீட்டிலிருந்து நகை, பணங்களை சாவகாசமாக ஆட்டைய போட்டுக் கொண்டிருந்தது. பிறகு எல்லாத்தையும் சுருட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற வந்தது. அந்த கொள்ளையரில் ஒருவன், சிசிடிவி காமரா இருக்கிறதா என எட்டி பார்த்தான்... எதிர்பார்த்தபடியே காமிரா அங்கு இருந்தது.
குத்தாட்டம்
காமிராவை பார்த்ததும் அந்த கொள்ளையன் கூட இருந்த எல்லோரையும் உடனே வெளியே போக செய்தான். பின்னர் தனியாளாக நின்றுகொண்டு, அங்கிருந்த காமிராவை பார்த்து, டான்ஸ் ஆடினான். அதாவது போலீசாருக்கு சவால் விடும் வகையில் இந்த குத்தாட்டம் போட்டிருக்கான். அவ்வளவு தில்லாக சவால்விட்டாலும் அந்த கொள்ளையன் முகத்தை மூடிக் கொண்டுதான் டான்ஸ் ஆடினான்.
சிக்க போறார் டான்ஸ்ர்
ஆனாலும் விதி... அவனை விடவில்லை... தலைவர் முகம் போலீசாருக்கு க்ளியரா தெரிஞ்சு போயிடுச்சு. எப்போ தெரியுமா? காமிரா இருக்கிறதா-ன்னு எட்டி பார்த்தப்பவே முகம் பளிச்சுனு பதிஞ்சு போச்சு. சீக்கிரத்தில சிக்க போறார் நம்ம டான்ஸர்!!