தெருவில் இறங்கி ஆட்டம் போடும் மக்கள்.. லடாக்கில் உற்சாகம்
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மத்திய அரசு மாற்றி உள்ள நிலையில், கணிசமான மக்கள் அதற்கு, ஆதரவு அளித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கிவிட்டு, லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களை உருவாக்குவதாக ராஜ்யசபாவில் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
இந்த சட்டத் திருத்த மசோதா ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறிய நிலையில், இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக அதிருப்தியாளர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, கடந்த சில நாட்களாகவே காஷ்மீரில் கூடுதலாக துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு வந்தனர். ஆனால் மறுபக்கம் இந்த அறிவிப்பை வரவேற்று கொண்டாட்டங்களும் குறைவின்றி நடந்து வருகின்றன.
Celebrations in Leh after Ladakh was made a Union Territory yesterday. pic.twitter.com/kAiFbDiULC
— ANI (@ANI) August 6, 2019
லே மற்றும் லடாக் பகுதிகளில் அப்பகுதி மக்கள் தெருக்களில் உற்சாகமாக நடனமிட்டு தங்கள் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர். லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றப்படும் என்றாலும், அங்கு சட்டசபை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.