செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கி கவுண்ட்டர்களில் மாற்றுவதை நிறுத்த மத்திய அரசு யோசனை
வங்கி கவுண்ட்டர்களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது.
டெல்லி: செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கி கவுண்டர்களில் மாற்றுவதை நிறுத்த யோசனை செய்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரம் மிகப் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் உச்சநீதிமன்றமே, இதே நிலைமை தொடர்ந்தால் கலவரமே வெடிக்கும் என எச்சரித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில், ரூபாய் நோட்டுகள் செல்லாது என தொடரப்படும் வழக்குகளுக்கு தடை கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது.
மேலும் மத்திய அரசு தரப்பில், வங்கி கவுண்டர்களில் மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை செலுத்த அனுமதிப்பதால்தான் கூட்ட நெரில்ச ஏற்படுகிறது. இதனால் வங்கிக் கணக்குகளில் ரூபாய் நோட்டுகளை செலுத்துவது குறித்தும் கவுண்ட்டர்களில் மாற்றுவதை நிறுத்துவது குறித்தும் யோசித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.